முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured Post

Manikandan_மணிகண்டன்(பக்தி) மயிலை ஶ்ரீ கபாலீஸ்வரர் ஆலயம் அறுபத்து மூவர்கள் புறப்பாடு இனிதே துவங்கியது

Shri Kripa-pureeshwarar Temple Thiruvennainallur அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் கோயில் திருவெண்ணைநல்லூர் தல வரலாறு


திருவெண்ணெய்நல்லூர் தல வரலாறு
"தேர் திருவிழா"
மங்களாம்பிகை உடனுறை
கிரிபாபுரீஸ்வரர் தேரோட்டம்
இறைவர் திருப்பெயர்:
கிருபாபுரீசுவரர், அருட்டுறை நாதர், தடுத்தாட்கொண்டநாதர்.

இறைவியார் திருப்பெயர்: மங்களாம்பிகை,
வேற்கண்ணிநாயகி.


தல மரம்: தீர்த்தம் : தண்டதீர்த்தம், பெண்ணையாறு.
வழிபட்டோர்:

சுந்தரர், அப்பர், சேக்கிழார், வேதங்கள், திருமால், வேதன், ஷண்முகன், விஜயன், சுந்தரமூர்த்தி நாயனார், கம்பர், மெய்கண்டார்

வேதங்கள் சிவபெருமான் அப்படி இங்கு தவம் புரிய அவற்றின் நடுவே எரியுருவமாகத் தோன்றினார்.

எல்லோரும் வழிபட சுயம்பூ லிங்கமாகக் காட்சியளிக்கிறார், இறைவியார் வெண்ணெய்யால் கோட்டை அமைத்து வழிபட்டதால் வெண்ணெய் நல்லூர் எனப் பெயர் பெற்றது.

இறைவன் நஞ்சுண்ட காலத்தில் அந்நஞ்சு அவரைத் துன்புறுத்தாமலிருக்க உமையம்மை இத்தலத்தில் பசு வெண்ணெயால் கோட்டை கட்டி அதில் பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவிலிருந்து தவம் செய்த காரணத்தால் இத்தலம் வெண்ணெய்நல்லூர் எனப் பெயர் பெற்றதெனத் தலபுராணம் கூறுகிறது.

சிவபெருமானால் அகந்தை நீக்கப்பட்ட தாருகாவனத்து ரிஷிகள் வழிபட்ட ஊர். அவர்களுக்குக் கருணை செய்து அருள் புரிந்ததால் இறைவன் கிருபாபுரீஸ்வரர் அல்லது அருள் துறை நாதர் என்று அழைக்கப்படுகிறார்.

அருச்சுனன் தன அண்ணன் தருமன், திரௌபதியுடன் தனித்திருந்ததைப் பார்க்க நேர்ந்த பாவத்தை இங்கு வழிபட்டு விடுபட்டான். விஜய லிங்கத்தை வழிபட்டு அருச்சுனன் மகப்பேறு பெற்றான்.

மஹாவிஷ்ணு பூஜித்தது சங்கரலிங்கம். சுந்தர லிங்கம் தேவேந்திரனால் வழ‌ங்படப்பட்டது.

கருவுற்ற பசுவை வேள்வி செய்த பாவத்தை வித கோத்திரர் என்ற அந்தணர் இங்கு வழிபட்டுத் தீர்த்துக் கொண்டார்.

சுந்தரமூர்த்தி நாயனார், புத்தூர் சடங்கவி சிவாச்சாரியாருடைய மகளாரைத் திருமணஞ் செய்தருளும் போது, இறைவர், முன் கயிலாயத்தில் அருளியபடி வயது முதிர்ந்த அந்தணராய்த் தோன்றித் தடுத்தாட்கொண்டருளினார்.

அப்புத்தூர் இப்பொழுது மணம் தவிர்ந்த புத்தூர் என்று வழங்கப்படுகின்றது. சிவபெருமான் சுந்தரரை ஓலை ஆவணம் காட்டி தடுத்தாட்கொண்டருளிய திருவூர் திருவெண்ணெய்நல்லூர்.

நின் 'வருமுறைமனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக' என்று கேட்டவர்க்கு 'என் இருப்பிடம் இதுவே' என்று இறைவன் காட்டிய திருக்கோயிலை உடைய பதி.
சைவசமய சந்தனாசாரியராகிய மெய்கண்டதேவர் எழுந்தருளிய தலமும் இது.

கல்வெட்டு மூலம் அறியவரும் இறைவர் திருப்பெயர்கள்:
திருவெண்ணைநல்லூர்த் திருவருட்டுறை ஆள்வார்,

திருவெண்ணைநல்லுர் உடையார் ஆட்கொண்டதேவர்,
தடுத்தாட்கொண்டதேவர்.




 



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விநாயகர் சதுர்த்தி மாவடி விநாயகர் கோவில் மணலூர்பேட்டை & Manalurpet Mavadi Vinayagar Kovil

"விநாயகர் சதுர்த்தி" என்பது விநாயகரின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு முக்கியமான இந்துப் பண்டிகை. இது ஆவணி மாதத்தில் (ஆகஸ்ட்-செப்டம்பர்) வளர் பிறையின் நான்காம் நாளில் கொண்டாடப்படுகிறது. Vinayagar image Kovil image https://en.m.wikipedia.org/wiki/Ganesh_Chaturthi இந்த நாளில், மக்கள் தங்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் களிமண் அல்லது பிற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். இந்த சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் மற்றும் அலங்காரங்கள் செய்வார்கள். விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், சுண்டல், அவல், பொரி போன்ற இனிப்பு மற்றும் கார பலகாரங்கள் படைத்து வழிபடுவார்கள். அத்துடன், அருகம்புல், எருக்கம்பூ போன்றவையும் விநாயகருக்கு விசேஷமாகப் படைக்கப்படுகின்றன. பத்து நாட்கள் வரை நீடிக்கும் இந்தப் பண்டிகையின் முடிவில், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் (குளம், ஆறு, கடல்) கரைப்பார்கள். இது, விநாயகர் மீண்டும் கைலாச மலைக்குத் திரும்புவதைக் குறிப்பதாகவும், சிலையுடன் சேர்த்து நமது துன்பங்களும், தீய எண்ணங்களும் கரை...

அர்த்தநாரீஸ்வரர்_கோவில்_ரிஷிவந்தியம் & Rishivandiyam Ardhanareeshwarar Temple

அர்த்தநாரீஸ்வரர் கோவில்- ரிஷிவந்தியம் https://manimpt79.blogspot.com/ >

Navarathri_poojai_8th_day & நவராத்திரி எட்டாம் நாள் பூஜைக்கான தேவி: துர்கா தேவி

  நவராத்திரி எட்டாம் நாள் பூஜைக்கான தேவி: துர்கா தேவி. நவராத்திரியின் எட்டாம் நாள், மகா துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாள் துர்காஷ்டமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில், துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களில் மிகவும் உக்கிரமான ரூபமான துர்கா தேவியை மக்கள் வழிபடுகின்றனர். துர்கா தேவி தீமைகளை அழிக்கும் சக்தியாகவும், நல்லவர்களுக்கு தைரியம் மற்றும் பாதுகாப்பைக் கொடுப்பவராகவும் கருதப்படுகிறார். https://youtube.com/shorts/RroBGWuCdZw இந்த நாளில், பல இடங்களில் சிறப்பு பூஜைகளும், யாகங்களும் நடத்தப்படுகின்றன. மேலும், குழந்தைகளுக்கு புதிய ஆடைகள் மற்றும் பரிசுகள் கொடுத்து மகிழ்வது வழக்கம். இந்த நாள் நவராத்திரி கொண்டாட்டங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது.