அருள்மிகு சுந்தராம்பிகை அம்மை உடனுறை வைத்தியநாத சுவாமி திருத்தலம்
இறைவனார் திருப்பெயர்: வயிரத்தூண் நாதர், வைத்தியநாதர்,
மழுவாடீஸ்வரர். (சுயம்பு மூர்த்தி)
இறைவியார் திருப்பெயர்: சுந்தராம்பிகை, அழகம்மை.
தல மரம்: பனை மரம்
ஆறு: கொள்ளிடப் பேராறு
அரியலூர் மாவட்டம் திருமழப்பாடியில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள, சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி திருக்கோவில் மிகவும் பழைமையான சிவாலயம் ஆகும். இக்கோவில் நந்தி தேவர் திருமணத்திற்காகப் புகழ்பெற்றது மற்றும் நோய்களைத் தீர்க்கும் திருத்தலமாக விளங்குகிறது. தை மாதத்தில் சூரிய ஒளி மூலவர் மீது விழுவது சிறப்பம்சம்.
வழிபட்டோர்: நந்தி தேவர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேக்கிழார், திருமால், மார்க்கண்டேயர், இந்திரன், புருஷாமிருக ரிஷி முதலானோர்.தலப்பெருமை
இறைவன், மார்க்கண்டேயருக்காக மழுவேந்தி நடனமாடிய பதியாதலின் இப்பெயர் பெற்றது.நந்திதேவருக்கு சுயசாம்பிகையை திருமணம் செய்விக்கப் பெற்றத் தலம். திருநந்தியெம் பெருமான், திருக்கல்யாண விழா, ஆண்டுதோறும், பங்குனி புனர்பூச நாளன்று மிகச் சிறப்பாய் நடைபெறுகிறது.புருஷாமிருக ரிஷி என்பவர் பிரமலோகத்திலிருந்தச் சிவலிங்கத்தை இங்கு எழுந்தருளுவித்தார். அதை மீண்டும் பிரமன் பெயர்க்கமுனைந்தபோது முடியாமல் பிரமன், இது,"வயிரத் தூணோ" என்று வியந்தமையால், இறைவர் வயிரத் தூண் நாதர் எனப் பெற்றார்.ஈசன், சுந்தரர் பால், "மழபாடிக்கு வர மறந்தனையோ" என அழைத்த திருத்தலம்.சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி திருக்கோவில்
x
